Tuesday, October 22, 2013

சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம்!!!

*மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.

*மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.

*பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.

*பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.

*தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம்.

*அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.

*தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின் பாசம்.

Sunday, September 22, 2013

ஏ பெண்ணே...!!

ஏ பெண்ணே...!!

மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின் 
மனதிற்கு சொல்லிட வேண்டும் உன் கால் மிஞ்சு..

நிமிர்ந்து பார்த்து நடந்து வரும் ஆணின் நெஞ்சத்திற்கு சொல்லிட வேண்டும் உன் நெற்றிக் குங்குமம்...

கண்கள் பார்த்து பேசிடும் ஆணின் கவனத்திற்கு சொல்லிட வேண்டும் உன் கழுத்து மாங்கல்யம்...

நீ இன்னொருவனின் இல்லாள் என்று...

கண் மை இட்டு கண்களை அழகாக எடுத்துக் காட்டுவதில் காலம் தவறாத நீ கழுத்தில் இருக்கும் மங்கல்யத்தை மறைப்பதேனோ??

குதிகால் செருப்பில் காலை அலங்கரிக்க மறக்காத நீ
கால் விரலின் மிஞ்சியை மறந்ததேனோ??

தலைவிரி கோலமே நாகரீகமெனும் தத்துவத்தை விரும்பும் நீ தலை வகுட்டில் வைக்கும் குங்குமத்தை விரும்பாததேனோ??

இவைகளை நீ சம்பிரதாயங்கள் என்கிறாய் நான் சாட்சிகள் என்கிறேன்..

உன்னவனுக்கு மட்டுமே நீ உரியவளாய் இருக்க..
எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க..
மறைத்திடாதே ஒரு போதும் இந்தச் சாட்சிகளை..

# நவீனமயப்படுத்தல் என்ற பெயரில் பெருமதிமிகு பண்பாடு மற்றும் பாரம்பரியம் என்பவற்றை புறக்கணிக்கவோ மாற்றியமைக்கவோ வேண்டாம்.

Sunday, September 15, 2013

மனித உறவுகள் மேம்பட!!

•தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.
•அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள். (LOOSE TALK)
•எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காகக் கையாளுங்கள். (DIPLOMACY)
•விட்டுக்கொடுங்கள். (COMPROMISE)
•சில நேரங்களின் சிற்சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என்று உணருங்கள். (TOLERANCE)
• நீங்கள் சொன்னதே சரி, நீங்கள் செய்ததே என்று கடைசி வரை வாதாடாதீர்கள். ( ADAMANT ARGUMENT)
•குறிகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (NARROW MINDEDNESS)
•உண்மை எது, பொய் எது என்று அறியாத நிலையில் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் , அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (CARRYING TALES)
•மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். (SUPERIORITY COMPLEX)
•அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். (OVER EXPECTATION)
•எல்லோரிடத்திலும் எல்லா விஷ யங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
•கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
•அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
•உங்கள் கருத்தக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். (FLEXIBILITY)
•மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். (MISUNDERSTANDING)
•மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும். மற்றும் இனிய இதமான சொற்களைப் பயன் படுத்தவும் தவறாதீர்கள். (COURTESY)
•புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
•பேச்சிலும், நடத்தையிலும் திமிர் தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.
•அவப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள். (FRAKNESS)
•பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன்வாருங்கள். (INITIATIVE)
•தேவையான இடங்களில் நன்றியையும் பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்.

Tuesday, August 27, 2013

சின்ன வயசுல நாம எப்படியெல்லாம் இருந்தோம். இப்ப எப்படியெல்லாம் இருக்கோம்!!


1.நமக்கு சாப்புட கைல ஒரு பாக்கெட் மிட்டாய் கிடைச்சாலும் அதை ஒரு நொடில தின்னு காலி பண்ணிருவோம்.இல்லாட்டி நம்ம மண்டை வெடிச்சுரும்.இப்ப அதை கொடுத்தா ஒன்னு மட்டும் எடுத்து வாய்ல போட்டு பாக்கெட்ட ஓரமா வச்சுருவோம்.

2.திருவிழா கடைக்கு போனா நம்ம கண்ல பட்டதெல்லாம் கைய நீட்டிக் கேட்டிருப்போம். இல்லை என்ற பதில் தான் அதிகம் கிடைச்சுருக்கும். அதையும் காசு இல்லைன்னு உண்மைய சொல்லாம அந்த பொருள் நல்லா இல்லைன்னு பொய் சொல்லிருப்பாங்க. இப்ப அது எல்லாத்தையும் வாங்க நம்மகிட்ட காசு இருக்கும், ஆனா விளையாட வயசு தான் இருக்காது.

3.அம்மாக்கிட்ட நொய் நொய்ன்னு எதையாவது பேசிக்கிட்டே இருப்போம்.அவங்களும் புரிஞ்சாலும் புரியாட்டியும் மண்டைய ஆட்டி ரசிச்சுருப்பாங்க. இன்னைக்கு அம்மா நம்ம கிட்ட பேசறப்ப, நாம என்னவோ கலெக்டர் வேலைக்கு போற மாறி "சீக்கிரம் சொல்லுமா " ன்னு அலுத்துகுவோம்.

4.அப்பா நேரத்தோட வீட்டுக்கு வரலைன்னா மூஞ்ச தூக்கிட்டு மூலைல உட்காந்திருப்போம்.இன்னைக்கு நாம நேரம் கழிச்சு வீட்டுக்குப் போறப்ப அப்பா வீட்டுல இல்லைன்னா "அப்பாடா தப்பிச்சோம்" ன்னு பெருமூச்சு விடுவோம்.

5. சிபிஐ மாறி நம்ம அக்கா, அண்ணா லாம் என்ன பண்றாங்கன்னு கவனிக்கரதையே வேலையா வச்சுருப்போம். " இரு இரு உன்னைய அப்பாக்கிட்ட சொல்றேன்னு " மிரட்டி வேற பாப்போம்.இன்னைக்கு நாம பண்ற வேலையெல்லாம் அவங்களுக்கு தெரியாம பாத்துகறதே நமக்கு பெரிய வேலையா இருக்கும்.

6.ஏலேய்....ன்னு ஒரு சத்தம் கேட்டாலே ஓடிபோய் அம்மா முன்னாடி நிப்போம்.இப்ப கோர்ட்ல கூப்புடற மாறி 3 தரம் பேரச் சொல்லிக் கூப்டா கூட நம்ம காதுல விழாத அளவுக்கு இணையத்தில் மூழ்கி இருப்போம்.

7.அப்பாவோ அம்மா வோ வெளிய போனா, என்னைக் கூப்டு போயே ஆகனும்ன்னு தரயில படுத்துட்டு உருண்டு புரண்டு அழுவோம். இப்ப அவங்கள வெளிய கூப்டு போய் அவங்ககூட நேரம் செலவழிக்கரத விட பெரிய வேலைகளெல்லாம் நமக்கு இருக்கும்.

8.பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போறப்ப, நேரா நடக்க மாட்டோம்.மரக்கிளைய புடிச்சு தொங்கறது, ரோட்ல கிடக்கற கல்ல கலால தள்ளி தள்ளிட்டே போறது. நின்ன இடத்துல சச்சின் போஸ் கொடுக்கறதுன்னு இல்லாத சேட்டைலாம் செஞ்சுக்கிட்டே தான் போவோம். இப்பலாம் ரோட்ல நடக்கறப்ப கைல மொபைல் வச்சுட்டு குனிஞ்ச தலை நிமிராம நேரா போய் செவுத்துல முட்டிப்போம்.

Friday, August 23, 2013

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...!!

ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

Monday, August 12, 2013

அறியாதவற்றை அறிந்துகொள்ளுங்கள்…!

 கணடங்களில் பெரியது ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் – டை – ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.
* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
*அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.
* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.
* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.
* இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.
* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.
* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.
* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.
தமிழ்நாட்டில் பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மனைகள் உள்ளன.
அவை,
1. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை
2. திருச்சி மங்கம்மாள் அரண்மனை
3. தஞ்சாவூர் சரபோஜி அரண்மனை
4. புதுக்கோட்டை அரண்மனை
5. சென்னை சேப்பாக்கம் அரண்மனை
6. சிவகங்கை அரண்மனை
7. எட்டயபுரம் அரண்மனை8. இராமநாதபுரம் அரண்மனை
9. பத்மனாபுரம் அரண்மனை
10. மதுரை அரசி மங்கம்மாள் அரண்மனை
* ராக்கெட்டினை முதலில் கண்டறிந்தவர் சீனர்கள். இது 13ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.
* நமது உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில் 4 1/2 லிட்டர் உடல் முழுவதும் சுற்றி வருகிறது. மீதி 1 1/2 லிட்டர் ரத்தத்தை சேமிப்பாக உடல் வைத்துள்ளது.
* செவ்வாய் கிரகத்தில் ஒருநாள் என்பது 24 1/2 மணி நேரம். கோடை நண்பகலில் கூட இங்கு 16டிகிரி c நிலை இருக்கும். குளிர்கால இரவிலோ 85டிகிரி c வந்து விடும்.
* 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆமைகள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இவை மெதுவாகச் செல்லக் கூடியவை. இவற்றுக்குப் பற்கள் கிடையாது. தாவர வகை உணவைச் சாப்பிடுவதில்லை.
300 ஆண்டுகளுக்கு மேல் ஆமைகள் உயிர் வாழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
* தென் அமேரிக்கா பறவைகளின் கண்டம் என அழைக்கப்படுகிறது.
* இந்தியாவில் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
* இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
* உலகிலேயே மிகப் பெரிய வெந்நீர் ஏரி நியூசிலாந்து நாட்டில் உள்ளது.
* ஆஸ்திரேலியா நாட்டிற்கு இரு தேசியகீதங்கள் உள்ளன.
* இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர் ரெட்கிளிப் எனப்படுகிறது.
* தொழில்புரட்சி முதன் முதலில் நடந்த நாடு இங்கிலாந்து.
* பிரிட்டனின் தேசிய மலர் ரோஜா.
* இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
* சம்பா நடனத்திற்கு புகழ் பெற்ற நாடு பிரேசில்.
* சோவியத் ரஷ்ய ராணுவத்தின் பெயர் ரெட் ஆர்மி.
* சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவுக்கு கொடுத்த நாடு பிரான்ஸ்.
* 1905 – சுஸான்னே ஆர்டி டாட்டா என்னும் பெண்மணிதான் இந்தியாவில் முதன்முதலாக கார் ஓட்டியவர்.
* 1916 – தோண்டோ கேசவ் கார்வ் என்பவரால் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. முதலாண்டில் எத்தனை மாணவிகள் படித்தார்கள் தெரியுமா? 5 பேர் தான்.
* 1927 – அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.
* 1959 – அன்னா சாண்டி இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதிவியேற்றார்.
* 1966 – கேப்டன் துர்கா பானர்ஜி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முதல் பெண் விமானியாவார். இதே ஆண்டில், கமலாதேவி சடோபாத்யாய ‘மகசேசே’ விருதைப் பெற்றார். இந்தியாவின் முத்ல் பெண் பிரதமராக இந்திரா காந்தி பதவியேற்றார்.
* 1970 – ஆசிய விளையாட்டுப் போட்டியில் கமல்ஜித் சாந்து முதன் முதலாக தங்கப் பதக்கம் வென்றார்.
* 1972 – இந்தியாவின் முதல் ஐ.பி.எஸ். அதிகாரியாக கிரண் பேடி காவல் துறையில் பதவியேற்றார்.
* 1989 – முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக எம். பாத்திமா பீவி பதிவியேற்றார்.
* 1997 – கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்னும் சாதனைக்குச் சொந்தக்காரர்.
* 2005 – பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த மந்திர் ராஜ்புட், முதல் பெண் ரயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.
* 2007 – இந்தியாவின் முத்ல் பெண் குடியரசுத் தலைவராக இருப்பவர் பிரதிபா பாட்டீல்.
* நாம் உபயோகப்படுத்தும் ‘டை’ 3300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
* இந்தியாவில் மே தினத்தை 1927 -ம் ஆண்டுலிருந்து கொண்டாடப்படுகிறது.
* சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
* பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் ரோமானியர்கள்.

தலை வாழையிலையில் பரிமாறும் முறை!!

1) உப்பு
2) ஊறுகாய்
3) சட்னிப் பொடி
4) கோசும்பரி
5) கோசும்பரி
6) தேங்காய் சட்னி
7) பீன்.. பல்யா
பலாப்பழ உண்டி
9) சித்ரண்ணம்
10) அப்பளம் (பப்படம்)
11) கொரிப்பு
12) இட்லி
13) சாதம்
14) பருப்பு
15) தயிர் வெங்காயம்
16) இரசம்
17) பச்சடி
18) கதிரிக்காய் பக்கோடா
19) கூட்டு
20) பொரியல்
21) அவியல்
22) கத்ரிக்காய் சாம்பார்
23) இனிப்பு
24) வடை
25) இனிப்பு தேங்காய் சட்னி
26) கிச்சிடி
27) காரப்பொரியல்
28) பாயசம்
29) தயிர்
30) மோர்
31) பலகார வகைகள்

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்...!!!

1. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.

விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.

2. அடியாத மாடு படியாது.

விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே

வாளோடு முன் தோன்றிய மூத்த குடி

விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு

விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.



6. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

7. பசி வந்திட பத்தும் பறந்து போகும்

விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

8. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

10. சேலை கட்டிய மாதரை நம்பாதே

விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.

11. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

Saturday, July 6, 2013

பெற்றோர்களுக்காக சில துளிகள்:-

1. அம்மா என்றால் சமையல் செய்பவள், அப்பா என்றால் சம்பாதிப்பவர் என்ற கருத்துக்களை குழந்தைகளின் மனதில் விதைக்காதீர்கள். யார் வேண்டுமானாலும் எந்த வேலையையும் செய்யலாம், உயர்ந்தது, தாழ்ந்தது ஏதுமில்லை என்ற எண்ணங்களை விதையுங்கள்!

2.. எதுவாய் இருந்தாலும் அம்மா மட்டுமே அல்லது அப்பா மட்டுமே, அல்லது வீட்டில் உள்ள பெரியவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று இப்போதே கருத்து சுதந்திரத்தை மறுக்காதீர்கள்!

3. குழந்தைகள் பற்றிய முடிவுகளை, அவர்களிடம் கருத்துக் கேட்டு, அவர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுத்து முடிவு செய்யுங்கள். அவர்கள் சொல்லும் கருத்து அல்லது விருப்பம் உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றால், அதை ஒரு தோழமையுடன் எடுத்துச் சொல்லுங்கள்! ஒருபோதும் உங்கள் அதிகாரத்தை பிரயோகிக்காதீர்கள்!

4. பகிர்ந்து உண்ணுதல், விலங்குகளிடம் அன்பு செலுத்துதல் போன்ற பழக்கங்களை விதையுங்கள். குழந்தையுடன் செல்கையில் நீங்களே ஒரு நாயையோ, பூனையையோ கல்லெடுத்து விரட்டி, வன்முறையை விதைக்காதீர்கள்! பெரும்பாலும் வீட்டு விலங்குகளுடன் பழகும் குழந்தைகளிடம் அன்பு நிறைந்திருக்கும், வன்முறை குறைந்திருக்கும். (அன்பு நிறைந்திருக்க நீங்கள் இங்கு கூறிய எல்லாவற்றையும் செயல்படுத்த வேண்டும்)

5. அந்த மாமா வந்தால், அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ, அந்த கடன்காரன் பேசுறானா போனில், நான் வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ இப்போதே பொய் கூற பழக்காதீர்கள்.

6. "நம்ம சாதிக்காரங்க இவங்க"," நம்ம மதத்தை சேர்ந்தவங்க இவங்க" என்ற அறிமுகத்தை விட்டுவிட்டு, உறவுமுறை கொண்டோ, நட்பின் பின்புலம் கொண்டோ அறிமுகம் செய்யுங்கள். 

7.. உங்கள் குழந்தையை, உங்கள் மற்றொரு குழந்தையோ அல்லது வேறு ஒருவரின் குழந்தையோ, அடித்தாலோ, திட்டினாலோ, "திருப்பி திட்டு", "திருப்பி அடி" என்று வன்மம் வளர்க்காதீர்கள்! நாளை இவர்கள்தான் ஆயுதம் எடுப்பார்கள்.

8.. ஏன் அந்த தவறு நடந்தது? இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சம்பந்தப்பட்ட குழந்தைகளிடமே தீர்வு கேளுங்கள்! மெதுவாய் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நாளை நல்ல சட்ட வல்லுனர்கள் உருவாகலாம்! 

9."கத்தாதே சனியனே" என்று நீங்கள் கத்தி கொண்டு இருக்காதீர்கள். மலர்களை கொடிய வார்த்தைகளில் அர்ச்சிக்காதீர்கள்.

10.. பலபேர் முன்னிலையில் ஒருபோதும் உங்கள் குழந்தையை திட்டி, குறை சொல்லி வேதனை படுத்தாதீர்கள். குழந்தைகளுக்கும் சுயகௌரவம் உண்டு, எந்த வயதானாலும்.

11. "அண்ணன் சொல்வது போல நட", "அக்கா சொல்வது போல நட" என்று சொல்லாமல்," நீங்கள் இருவரும் பேசி முடிவு செய்யுங்கள்" என்று சமத்துவம் உருவாக்குங்கள். பெரியவர் முதுகில் சுமையையும், சிறியவர் மனதில் தாழ்வுணர்ச்சியையும் ஏற்படுத்தாதீர்கள்!

12. கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்து விடுங்கள்! அழைத்து செல்ல நேர்கையில், பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! 

13. ஒருபோதும் குழந்தையின் முன்னிலையில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, அல்லது அதை வாங்கி வர பணிப்பது போன்ற அடாத செயல்களை செய்யாதீர்கள்! 

14. குழந்தையின் சில சிறு வயது குறும்புகள், விலங்குகளையோ, பெரியவர்களையோ, சக குழந்தையையோ துன்புறுத்துவதாக அமைந்தால், குழந்தையின் எதிரே அந்த குறும்பை கண்டு சிரித்து, ரசிக்காதீர்கள். உங்கள் சிறு குழந்தை, குறும்பாய் வீட்டில் பாட்டியின் பல்லை உடைத்தாலோ, பூனையின் வாலைத் பிடித்து தூக்கி எறிந்தாலோ, குழந்தைக்கு எவ்வளவு வலிமை, பயமேயில்லை என் குழந்தைக்கு என்று குழந்தையின் எதிரே ரசித்தீர்கள் என்றால், பின்னாளில் வளரும் வன்முறையில் நீங்கள் ரசிப்பதற்கு ஏதும் இருக்காது! 

15. உங்களால் செய்யக் கூடிய செயல்களை, தரக் கூடிய பொருள்களை, குழந்தையை அழ வைக்காமல் செய்து விடுங்கள், கொடுத்து விடுங்கள். அடம் பிடிக்க வைத்து, அழ வைத்தபிறகு செய்தால், குழந்தைக்கு அழுவதும், அடம் பிடிப்பதும் மட்டுமே இயல்பாகும்.

16. காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறியே தவிர, அதுவே நோய் அல்ல. உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் பொருட்டு இயற்கையாய் உடலில் ஏற்படும் வெப்பம் அது. குழந்தைகளுக்கு காய்ச்சல் கண்டால், சிறந்த குழந்தை நல மருத்துவரை கண்டு, எதற்கான காய்ச்சல் என்று கண்டறிந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகளை குறித்த வேளையில், குறித்த இடைவெளியில் மட்டுமே தருக. நாமே மருத்துவர் ஆவதை தவிர்த்தல் நலம்!

17. பலபேர் முன்னிலையில் எப்போதும் குழந்தைகளை குறை கூறுவதோ, அடிப்பதோ, திட்டுவதோ...இது போன்ற எந்த செயல்களையும் செய்யாதீர்கள். உங்களை இதுபோல் பிறர் செய்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

18. குழந்தைகள் சின்னஞ்சிறு பெரிய மனிதர்கள், இன்று நீங்கள் விதைப்பதை நாளை நீங்கள்தான் அறுவடை செய்ய வேண்டும். நல்லன விதைத்தால் நாளை நல்ல சமுதாயம் மலரும்! 

19. நல்ல கல்வி, சுய சிந்தனை, கைத்தொழில், சத்துள்ள உணவு, மரியாதை, ஆரோக்கியம் மற்றும் உள்ளார்ந்த அன்பு இவையே எல்லா குழந்தைகளுக்குமான அடிப்படை தேவைகள்! உங்கள் வன்முறை அல்ல!

Friday, June 21, 2013

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்!!


* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.

Thursday, June 20, 2013

மதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு!!




மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக

நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன்
கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன்
இருவருக்குமான கோவில்களில் முதன்மைச்
சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்.
மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால்,
மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது.
அம்மனை வணங்கிய
பின்பே சிவபெருமானை வணங்கும்
மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம்
மீனாட்சி ,
சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும்
கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும்
கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர
பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால்
அவன் கடம்பவனம் என்ற
காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த
சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக்
கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன்
கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள்
அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும்
மதுரைக்கு உண்டு. சிவபெருமானின்
அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன்
வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின்
எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர்
இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூற
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில்
எட்டு கோபுரங்களையும்
இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள
கருவறை விமானங்கள், இந்திர விமானம்
என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64
சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த
கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுமார் ௮௦௦
ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில்
கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக
792 அடியும் உடையது. இக்கோவிலின்
ஆடி வீதிகளில் நான்கு புறமும்
ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள்
மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. கிழக்குக்
கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும்
, மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும்,
தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும்,
வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம்
ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல்,
பின்னர் 1878 ஆம் ஆண்டில்
தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த
வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதா
கவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக்
கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160
அடி ஆக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம்
காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப்
பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர்
சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது.
சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப்
பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால்
திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள்
ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம்
அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம்,
மீனாட்சி நாயககர் மண்டபம், முதலி மண்டபம்,
ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்
கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம்,
சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க
மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர்
காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத
முதலியாரால் இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால்
மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும்.
இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக
அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின்
கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள்
அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த
புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக
அமைக்கப்பட்டு உள்ளது.)
மதுரை மீனாட்சியம்மன்
கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக்
கொண்டால் அதைச் சுற்றியுள்ள
தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும்
வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத்
தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள்,
சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள்
ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால்
மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என
மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.இந்தத்
தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர்
வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது.
மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில்
நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின்
பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.
'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' ஆலயத்தில் மீனாட்சி ,
சுந்தரேஸ்வரர் விகிரக வடிவிலும் பூரிக்கப்படுகின
்றன.
மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள
முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத
மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும்.
மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில்
காட்சி தரும் மூல விக்கிரகத்தினை "மரகதவல்லி"
எனவும் அழைக்கின்றனர்.
மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர
மீட்டர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்
ளது.ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர்
நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.
இந்த ஆலயம் 8
கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8
கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில்
அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள
இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும்,
மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்பணிக்கப்பட்ட
ுள்ளது.
ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட
கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக
உயரமானதுமாக தெற்கு வாசல் 170 அடி (52
மீற்றர்) உயரமுடையது.மற்றய வடக்கு, மேற்கு,
கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161
அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது.
மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும்
கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000
தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.
600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில்
உருவாகியதும் , மிகவும் கலை அம்சம்
மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33
மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக
சொல்லப்படுகின்றது.
ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில்
அமைந்துள்ள பொற்தாமரை குளமும் ,
தலவிருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின்
வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாட
ுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண
பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப்
பட்டுள்ளது.
வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும்
கலை நுணுக்கமும் ஒன்றுசேர உள்ள இந்த
ஆலயமனது உலக அதிசையங்களின் வரிசையில்
போட்டி போட்டது நினைவிருக்கலாம்.
ஒரு நகரம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும்,
அதன் கட்டமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும்,
அதன் வீதி அமைப்புகள் எவ்வாறு உருவாகப்பட
வேண்டும் என்பதை மதுரையைப்
பார்த்து தெரிந்து கொள்ளலாம

Sunday, June 16, 2013

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வேண்டுகோள் !!

*தினமும் 130கோடி டன் உணவு வீண்

*100 கோடி பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு,

*20000 பேர் பசியால் உயிரிழப்பு

*7 பேர்-ல் ஒருவருக்கு தினமும் உணவ்வில்லை,

*அறுவடையின் போது 15 கோடி டன் வீண்,

*ஒரு car-ல் வரும் மாசை விட வீணாகும் உணவால் ஏற்படும்
மீத்தேன் 25 மடங்கு அதிகம்,

*ஒரு நாளைக்கு ஒருவருக்கான உணவில் பாதிதான் உண்ணப்படுகிறது,

*வீணாகும் உணவில் நான்கில் ஒரு பங்கு இருந்தாலே
அனைவருக்கும் உணவு சாத்தியம்,

*தயாரிக்கப்படும் உணவில் 30% to 50% வீணாகிறது,

*பழ வகைகளில் 26% வீண்,

*அருந்தும் பானத்தில் 16% வீண்,

*அடுமனை பொருட்களில் 13% வீண்,

*சாப்பாடு வகைகளில் 12% வீண்,

*பால் பொருட்களில் 10% வீண்,

*இறைச்சி வகைகளில் 6% வீண்,

*24% டு 35% உணவு பள்ளிகளில் மதிய உணவில் வீணாகிறது,

*அதிகம் வருமானம் ஈட்டும் 18லிருந்து 24 வயது வரை
உள்ளவர்களால்தான் உணவு அதிக அளவில் வீணடிக்கப்படுகிறது,

*84% மக்களுக்கு உணவு வீணாகிறது,வீணடிக்கிறோம் என்ற
கவலையும் இல்லை,புரிதலும் இல்லை,

*5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் தினமும் ஒரு குழந்தை பசியால்
இறக்கிறது.

முறையான திட்டமிடல் இல்லை,தேவைகேற்ப உணவு பொருட்கள் வாங்கப்படுவதில்lai, பசித்தால் மட்டுமே உண்ணும் பழக்கம் வேண்டும்,உணவு தான்யம் உற்பத்தி அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் முன்னிலை வகிக்கிறது.australia- வில் ஒரு வருடத்தில் உற்பத்தி ஆகும், கோதுமைஅளவைப்போல்,இந்தியாவில் வீணடிக்கப்படுகிறது.அரசு சேமிப்பு கிடங்குகளில் 60 லட்சம் டன் வீணாகிறது,இதன் மதிப்பு மட்டும் 7500 கோடி.

ஒரு புறம் வீண்,ஒரு புறம் பசி,ஆடம்பரம்,அலட்சியத்தால் பருக்கை,பருக்கையாக சேர்த்த காந்தி வாழ்ந்த நாட்டில் பசியால் அவலம்.இங்கே உணவில்லாமல்,பட்டினி இல்லை,அலட்சியத்தால்தான்.திருமணம்,அரசியல் கூட்டங்களில் buffet முறையிலேயும் அதிகம் வீணடிக்கப்படுகிறது.இந்த மாதிரி function-ல் அதிகமாக இருக்கின்ற உணவை பக்கத்தில் உள்ள அன்பாலயம்,கருணாலயம்,ஏழைப்பள்ளிகளுக்கு கொடுக்கலாம்.அன்று மாலையே சொந்தகாரர் வீடுகளுக்கு சப்பாத்தி ,தோசை,பனியார மாவுகளை கொஞ்சம்,கொஞ்சமாக பிரித்து கொடுக்கலாம்,யாருமே கௌரவம் பார்க்கத் தேவை இல்லை,ஆர்வலர்கள் ஒரு omni car வைத்திருந்தால்,மண்டபங்களில் உணவை சேகரித்து இல்லாத இடங்களில் சேர்க்கலாம்.திருமணத்தில் அதிக item தயார் செய்வதை குறைத்து கொள்ளலாம்.அரசு கிடங்குகளை அதிகப்படுத்தவேண்டும்.மனமிருந்தால் மார்க்கம்முண்டு.ஒரு இலையில் உள்ள முழு உணவையும் தயார் செய்ய 125 லட்சம் litre நீர் பாய வேண்டும் என்கிறது ஒரு ஆய்வு.தண்ணீர் பிரச்சனை!!! கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்..எல்லாமே இருக்கு இங்கே,பின்ன என்னத்தை சார்,வெளியிலை தேடனும்..இயற்க்கை உயிரினங்களுக்கு வாழும் உரிமையை கொடுத்துள்ளது,அதை நாம் மதிக்கும் வரைதான்.மேலே சொன்னது எல்லாம் ஐ.நா.அறிக்கைதான்....

-நன்றி புதியதலைமுறை tv.5.6.2013.

Saturday, June 15, 2013

ஒரு ஐ.டி கம்பெனி எப்படி இருக்கும் ??

1) கம்பெனி வாசல் இருபுறங்களிலும் கண்டிப்பாக பிரியாணி கடை , சிகரட் விக்கும் பொட்டி கடை இருக்கும்

2) காலையிலும் மாலையிலும் ஒரு ஐந்து பேர் , வாசலில் நின்று வங்கிகளில் கடன் வாங்க அணுகவும் என்று விடாமல் துண்டு பிரசுரம் கொடுத்து கொண்டு இருப்பார்கள் .

3) பிரதமர் அலுவலகம் மாதிரி ஒரு 10 , 15 செக்யூரிட்டி சோதனைக்காக வாசலில் நின்றுகொண்டு இருப்பார்கள்.

4) வரும் அனைத்து கார்களின் டிக்கி கள் சோதனை செய்யப்படும். காருக்கு அடியில் ஒரு கண்ணாடி வைத்து எதையோ தேடுவார்கள் . அது என்ன என்று எனக்கு இன்று வரை தெரியாது . தெரிந்தவர்கள் சொல்லலாம்.

5) அலுவலக பேருந்தில் செல்பவர்கள் இறங்கும்போது அடையாள அட்டையை செக்யூரிட்டி யிடம் காட்ட வேண்டும்.

6) உள்ளே செல்லும் முன் கொண்டுசெல்லும் பையை திறந்து காட்டவேண்டும்.

7) சில நேரங்களில் Metal detector வைத்து ஒரு தனி அறைக்குள் அழைத்து சோதனை செய்யப்படும் . போனஸ் கொடுக்கவில்லை என்று குண்டு எதாவது இடுப்பில் கட்டி வெடிக்க வைத்துவிட்டால் என்ன செய்வது. அதுக்கு தான் இந்த சோதனை .

8 ) கேண்டீன் முதல் rest room (அப்படி தான் சொல்ல வேண்டும். பாத்ரூம் சொல்வது நாகரிகம் இல்லை இங்கு ) வரை பளீர் வெளிச்சத்தில் மின்விளக்குகள் ஒளிரும்.

9) கேண்டீனில் இருக்கும் தொலைகாட்சியில் NDTV மட்டுமே ஓடும்.

10) IT சர்வீஸ் – இவர்களுக்கு எப்போது அழைத்தாலும் தொலைபேசியை எடுக்கவே மாட்டார்கள் .

11) இலவசமாக காபி, டீ , பால் கிடைக்கும் .

12) “EMERGENCY EXIT” ஆங்காங்கே எழுதி ஒட்டி வைத்துருபார்கள்.

13) சில வெளிநாட்டு மாடல்கள் போஸ் கொடுத்து சில பல உண்மை உழைப்பு உயர்வு என்று வாசகங்கள் அங்காங்கே ஒட்டிருக்க்கும்.

14) hand dryer யில் கைக்குட்டையை கண்டிப்பாக ஒருவன் காயவைத்து கொண்டு இருப்பான் .

15) மதியம் சாப்பிட துண்டு போட்டு இடம் பிடிக்காத குறையா கேண்டீனில் இடம் பிடிக்க வேண்டும் .

16) வீட்டில் இருந்து கொண்டுவந்த உணவை சூடு பண்ண ஓவன் அருகே ஒரு நீண்ட வரிசை நிக்கும்.

17) வேலை செய்யும் கேபின் உள்ளே செல்ல மட்டும் தான் அனுமதி . உங்கள் அக்செஸ் கார்டு வேறு எந்த கேபின் உள்ளும் செல்ல அனுமதி இல்லை .

18) அலுவலகத்தை சுற்றிலும் புல்வெளி தோட்டம் அழுகு செடிகள் இருக்கும் .

19) டர்பன் கட்டின ஒரே ஒரு பஞ்சாபி எப்படியும் இருப்பார் .

20) லிப்டில் செல்லும்போது தெலுங்கு , தமிழ் , ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என்று அனைத்து மொழியும் கேட்கலாம் .

21) உடற்பயிற்சி கூடம்.சென்றாலே சாக்ஸ் கப் அடிக்கும் .

22) காதலர்கள் கலந்துரையாட மொட்டைமாடி இருக்கும்.

23) செக்யூரிட்டி நம்மிடம் பேசியிருக்கும் ஒரே வாக்கியம் “Sir Display the ID card”

24) ஒரு ATM இருக்கும்.

25) தூங்க தனி அறை கண்டிப்பா உண்டு .

# அவ்ளோதாங்க சாப்ட்வேர் கம்பெனி


நன்றி : Ravi Subbiah

Visit our Page -► தமிழால் இணைவோம்

Monday, June 10, 2013

"என் மனைவி வேலை செய்வதில்லை"


செலவு சித்தாயம் தலைக்குமேல் ஏறியிருக்கிற இந்தக் காலத்தில் வேலை செய்யாத மனைவியால் என்ன பிரயோசனம்? என் மனைவி, தேவியைப் பற்றித்தான் சொல்கிறேன். உறவினர்களும் நண்பர்களும் கண்ட இடத்தில் இவளைக் கேட்பதுண்டு, “இப்ப எங்கை ‘வேர்க்’ பண்ணுறியள்?” இவள் பதிலுக்குச் சிரித்து மழுப்புவாள். இவள் வேலையைவிட்டுப் பத்து வருடமாகிறது. வேலையில் கெட்டிக்காரி என்றுதான் பெயரெடுத்தாள். ஆனால் என்ன கண்டது? இப்போ வேலை செய்வதில்லை.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்துவிடுவாள். நான் ஏழு மணிக்கு வேலைக்குப் போகவேண்டும். எனக்கு வேண்டிய காலை உணவு, மதிய உணவு, இடையில் கடிக்க ஏதேனும் – இப்படி எனது அன்றாட மண்டகப்படி ‘லிஸ்ட்’ மிக நீண்டது. எல்லாவற்றையும் நாளுக்கு நாள் வெவ்வேறு சங்கதிகளுடன் மிக ருசியாக செய்து தருவாள். அதே சமயம் எனது நிறை கூடாமலும் முக்கியமாக என் இடுப்பு அளவு பருத்துடாமலும் பார்த்துக்கொள்வாள்.

ஆனால் அவள் மட்டும் வேலை செய்வதில்லை.

பிள்ளைகளைப் பள்ளிக்கு ஆயத்தப்படுத்துவதிலும் இதே கதைதான். அவர்களுக்குத் தலைமாட்டில் மணிக்கூடு கிடையாது. இவள்தான் அவர்கள் முதல் நாள் சொல்லிவிட்ட நேரத்துக்கு எழுப்பிவிடும் மணிக்கூடு. சாவி கொடுக்காமல், நேரம் ‘செற்’ பண்ணாமல் ஒரு நிமிடம்கூடப் பிந்தாமலும் முந்தாமலும் சொன்ன நேரத்துக்கு எழுப்புவதில் இவளுக்கு நிகரான மணிக்கூடு இன்னும் செய்யப்படவில்லை. அவர்கள் காலையில் எழும்பி வெளிக்கிட்டு வீட்டின் கீழ்த்தளத்திற்கு வரும்போது அவர்கள் மாடி அதிர எழுப்பும் ஓசையிலிருந்தே அவளுக்குத் தெரிந்துவிடும் அவர்களுடைய அவசரம் எந்த மட்டில் இருக்கிறதேன்று. அதேவேளை அவர்களுக்கு வேண்டியவற்றை – உணவு முதல் கைச்செலவுக்கும் கள்ளப் பணியாரத்துக்கும் வேண்டிய காசு வரை எல்லாம் அளவாகக் கொடுத்தனுப்புவாள். கொடுத்துக் கொண்டேயிருந்தால் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்பதில் அவளுக்கு நிறைந்த நம்பிக்கை. பின்னேரம் வந்தால் வளர்ந்த பிள்ளைகள் விஷயத்தில் இவள் தலையிடுவதில்லை. ஆனால் பிள்ளைகளைப்பற்றி எனக்குத் தெரியாத ருசியான சங்கதிகளெல்லாம் இவளுக்கு மட்டும் எப்படித்தான் தெரிகிறதோ? இவர்களின் முதல் நண்பர் தானே என்பதை அடிக்கடி நிரூபித்துக்கொள்வாள் போல் தெரிகிறது.

இவ்வளவு செய்தும் என்ன, அவள் வேலை செய்வதில்லை.

எங்கள் உடுப்புகள் அழுக்காகி கதவின் பின்னாலும் கட்டிலுக்குக் கீழேயும் மறைந்து கிடந்தாலும் இவள் கண்களிலிருந்து அவை தப்பமுடியாது. அவற்றின் நாற்றத்தையெல்லாம் எப்படித்தான் சகிக்கிறாளோ அறியேன். அவற்றைத் தேடித்தேடிப் பொறுக்கிய கையோடு தோய்த்து மடித்து அவரவர் அலுமாரியில் அன்றுதான் வாங்கிவந்ததுபோல் அடுக்கிவைத்து அழகு பார்ப்பாள்.

கிழமைக்கு முப்பது முறையாவது குசினியோடு தன்னைக் கட்டிப்போடுவாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி டின்னர். அதில் ஒரு இரவு விருந்தினர் வருகைக்காகச் செய்த விஷேட அயிட்டங்கள் அடங்கியிருக்கும். உணவுப் பேணிகள் எதுவும் மிஞ்சிப்போயிருந்தால் அவற்றை உள்ளூர் உணவு வங்கியில் கொண்டுபோய்க் கொடுத்துவிடுவாள்.

மருந்துகள் மாயங்கள் எதையும் அவளுக்குத் தெரியாமல் நாங்கள் வீட்டில் வைத்திருக்கமுடியாது. வெறும் தலையிடி, தடிமன் மருந்துகளைக்கூட மிகக் கவனமாகப் பேணி வைத்திருப்பாள். அவற்றைக் கண்டபடி போட அனுமதிக்கமாட்டாள். மொத்தத்தில் எங்கள் வீட்டு வைத்தியரும் அவளேதான். ஏதேனும் காரணத்தால் மனம் சோர்ந்து, உடல் சோர்ந்தபோது உடனடி வைத்தியம் அவளிடமுண்டு. அது அவளுடைய சிரிப்பும் அணைப்பும் மட்டுமே. நாம் வீட்டுக்கு வெளியே போகமுன் அவளை ‘ஹக்’ பண்ணாமல் போகமுடியாது.

வீட்டில் ஒரு தூசு, தும்பு அவள் கண்ணிலிருந்து தப்பமுடியாது. எந்த நேரமும் வீட்டைப் ‘பளிச்’சென வைத்துக்கொள்வாள். நானும் பிள்ளைகளும் கண்ட இடங்களிலும் விட்டெறிந்த பேனை, புத்தகங்கள், கை துடைத்த கடதாசிகள் போன்றவை அடுத்த நாட்காலை அவற்றிற்குரிய இடங்களைச் சென்றடைந்துவிடும். இதைப்பற்றி எங்களை ஒரு சொல் குறை சொல்லமாட்டாள். நாங்கள் மாலை வீடு திரும்பும்போது நேற்றுத்தான் குடிபுகுந்த வீடுபோலிருக்கும்.

என்றாலும் என்ன, அவள் வேலை செய்வதில்லை.

காலை பத்து மணி முதல் ஒரு மணிவரை எங்கள் நகரச் சமூக நிலைய நூலகத்தில் தொண்டராகக் கடமை செய்வாள். வீட்டுக்குத் திரும்பும்போது தான் வாசிக்கவெனக் கை நிறையப் புத்தகங்களும் வார இதழ்களும் கொண்டுவருவாள். பத்திரிகைகளிலும் விளம்பரங்களிலும் வரும் கூப்பன்களை வெட்டுயெடுத்துப் பேணிவைத்திருப்பாள். கடைக்கு மரக்கறி, சாமான்கள் வாங்கப் போனால் வேட்டிவைத்த கூப்பன்களைக் கொடுத்து எமது செலவில் ஒரு பகுதியைச் சேமித்துக்கொள்வாள். கடையில் கண்டதையும் வாங்கமாட்டாள். நமக்குத் தேவையான எவை மலிவு விற்பனையில் உள்ளனவோ அவற்றைமட்டுமே வாங்குவாள்.

இதுவும் செய்கிறாள், இன்னமும் செய்கிறாள். ஆனால் வேலை மட்டும் செய்வதில்லை.

என் குடும்ப வரவுசெலவுத் திட்டமும் அவள் ஏற்பாடுதான். எந்தெந்த ‘பில்லுகள்’ எப்பெப்போ கட்டவேண்டும், கார்க்கடனில் எவ்வளவு நிலுவையில் இருக்கிறது, காருக்கு ‘சேர்விஸ்’ எப்போ செய்யவேண்டும், பள்ளிக்கூடங்களுக்கு எவ்வளவு அளக்கவேண்டும், வீட்டுக்கடன் எப்போ புதுப்பிக்கவேண்டும் – எல்லா விபரங்களும் விரல் நுனியில் வைத்திருப்பாள்.

அவளுடைய உறவினர்கள், என்னுடைய ஆட்கள் என்று பாகுபாடு இல்லாமல் அவர்களுடைய குடும்பங்களில் ஒருவரும் விடாமல் பிறந்த நாள், திருமண நினைவு நாள் என்று எதையெல்லாம் அவர்கள் கொண்டாடுகிறார்களோ அந்தத் தினங்களையெல்லாம் மனப்பாடம் பண்ணிவைத்திருந்து உரிய நேரத்தில் அவர்களைக் கூப்பிட்டு வாழ்த்துச் சொல்லுவாள். நத்தார் தினமும் புதுவருடமும் வந்துவிட்டால் வீடு களைகட்டிவிடும். போன வருட லிஸ்டிலும் பார்க்க இந்த வருடம் வேண்டியவர்களின் தொகை கூடிவிடும். என்றாலும் இவர்கள் எல்லாருக்கும் வாழ்த்து மடல்கள் அனுப்பியோ தொலைபேசியில் அழைத்தோ எமது குடும்பத்தின் வாழ்த்துகளைத் தெரிவிக்க மறக்கமாட்டாள்.

ஆனால் இவள் இப்போ வேலை செய்கிறாளோ என்று கேட்பவர்களுக்கு, “வேலை எங்கே செய்கிறாள்” என்றுதான் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

மனிதரால் கண்டுபிடிக்கமுடியாத தொலைந்துபோன பொருள் எதுவும் இவளின் கண்களிலிருந்து தப்பமுடியாது. நாம் தேட வெளிக்கிட்ட அடுத்த நிமிடம் அதைக் கண்முன்னே கொண்டுவந்து நீட்டுவாள். சொன்னால் நம்பமாட்டீர்கள், கிழமைக்கு நான்கு முறையாவது குறைந்தது ஆறு கிலோ மீட்டராவது வீதியோர நடைபாதையில் வீச்சு நடை போடுவாள். வழியில் நாய்களையும் அவற்றின் எசமானர்களையும் ஒரேமாதிரி மதிப்பாள். அக்கம்பக்கதில் உள்ளவர்களின் கார்களின் பெயர்கள் மட்டுமே எனக்குத் தெரியும். ஆனால் இவளோ அவர்களையெல்லாம் சினேகிதம் பிடித்து வைத்திருக்கிறாள்.

ஆனால் அவள் வேலை செய்கிறாளா. ம்ஹூம், அதுமட்டும் இல்லை.

இப்போது அவள் இல்லத்தரசி, தாய், மனைவி, சமூக சேவகி மட்டுமே.

பிள்ளைகள் வளர்ந்து படிப்புகளை முடித்து உத்தியோகங்களைத் தேடிக் கடைசியில், வளர்ந்த கூட்டைவிட்டுப் பறந்து சென்றபிறகு இவளுக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கக்கூடும் அப்போது மீண்டும் வேலைக்குப் போகக்கூடும். ஆனால் தற்சமயம் இவள் மிகவும் ‘பிஸி’யாக இருக்கிறாள்.

மனதைத் தொட்ட வரிகள்"!





Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல்.

Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை!

Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது.

Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். 

சுபாஷ் சந்திர போஸ்!!

 ஜனவரி 23, 1897 இல் பிறந்தார். அவரது தந்தை ராய் பகதூர் Janakinath போஸ், கட்டாக், ஒரிஸ்ஸா, ஒரு முக்கிய வழக்கறிஞர் ஆவார். அவரது தாயார் Prabhavati போஸ், இந்திய பெண்ணே ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாக இருந்தது.

பின்னர், உலக நேதாஜி அவரை தெரிய வந்தது. கட்டாக் ஐரோப்பிய பிராட்டஸ்டன்ட் கல்லூரிகள் பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்த பின்னர், அவர் 1913 ஆம் ஆண்டில் ஜனாதிபதி கல்லூரியில் படிக்க கல்கத்தா வந்தார். தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு நேரத்தில் தோன்றும் இங்கிலாந்து இந்தியா விட்டு, ஆனால் அவர் பிரிட்டிஷ் அரசு கீழ் வேலை செய்ய தயக்கம் இருந்தது. இதனால் அவர் பதவி விலகினார் மற்றும் Chittaranjan தாஸ் அழைப்பு இந்தியா திரும்பினார்.

சுபாஷ் சந்திர போஸ் இளம் போராளி குழுக்கள் சுதந்திரம் இயக்கத்தின் இராணுவ கையில் ஒரு தடவப்பட்ட மற்றும் காரணம் மேலும் பயன்படுத்த முடியும் என்று உணர்ந்தேன். இது நேரடியாக அகிம்சையை தனது கொள்கையை (அல்லாத வன்முறை) முரண்பட்டுள்ளதால் காந்திஜி இந்த சித்தாந்தம் எதிர்த்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு ஆபத்தை ஒரு சாத்தியமான ஆதாரமாக சுபாஷ் அறிந்து அவரை அக்டோபர் 25, 1924 இல் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் கைது செய்தார். அவர் அலிப்பூர் சிறையில், கல்கத்தா அனுப்பி ஜனவரி 25, 1925 ல் மாண்டலே, பர்மா மாற்றப்பட்டது. அவர் காரணமாக அவரது உடல் நலம் மே மாதம் மாண்டலே, 1927 வெளியானது. கல்கத்தா திரும்பிய, சுபாஷ் அக்டோபர் 27, 1927 இல் வங்க காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுபாஷ் முயன்று ஒவ்வொரு சமூகத்தின் உரிமைகள் மரியாதை அடிப்படையில் இந்து மதம், முஸ்லீம் ஒற்றுமையை நோக்கி பணிபுரிந்த சில அரசியல்வாதிகள் ஒன்றாக இருந்தது. சுபாஷ், மத பேதம் சமூக தீய சுதந்திரம் நம்பிக்கை கொள்கைகளை, ஒரு மனிதன் இருப்பது.

புரட்சியாளர்கள் சிறை கண்டித்து ஒரு ஊர்வலத்தில் போது ஜனவரி 1930 சுபாஷ் கைது செய்யப்பட்டார். அவர் மறுத்துவிட்டார் அனைத்து அரசியல் நடவடிக்கைகள், வேண்டாம் என்று ஒரு பத்திர கையெழுத்து என்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதன் விளைவாக அவர் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் இருந்து விடுதலையான இல், சுபாஷ் கல்கத்தா மாநகராட்சி மேயர் பதவியேற்றார். 1931 ல் காந்தி மற்றும் சுபாஷ் இடையே பிளவு படிக. இரண்டு சுதந்திரம் மற்றும் இயக்கம் தன்னை அவர்களின் பார்வையில் கண்ணுக்கு கண் பார்த்தது இல்லை என்றாலும், சுபாஷ் காந்தி இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள ஒப்பு மூலம் இயக்கத்தை ஒரு பெரிய கெடுதி செய்தேன் என்று உணர்ந்தேன். சுபாஷ் காந்தி பிரிட்டிஷ் கொண்டு "பேச்சுவார்த்தை" இது சுதந்திர போலல்லாமல், ஒரு முழுமையான தேவையாக சுதந்திரம் பார்க்கப்படும்.

கல்கத்தா, பம்பாய் திரும்பிய, மற்றும் ஒரு எழுச்சியை பயம் மேற்கு வங்கத்தில் வெளியே பல சிறைகளில் சிறையில் போது சுபாஷ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரது உடல்நிலை மீண்டும் மோசமாகியது மற்றும் மருத்துவ வசதிகள் காசநோய் அவரை கண்டறியப்பட்டது. அதை அவர் சிகிச்சைக்காக சுவிச்சர்லாந்து அனுப்பப்படும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. வெளிநாட்டில் தனது வழிவகையை பிரிட்டிஷ் கட்டுப்பாடுகள் கொண்ட பெரிய என்று உணர்ந்து, சுபாஷ் பிப்ரவரி 23, 1933 இல் ஐரோப்பா புறப்பட்டது. சுபாஷ் சுதந்திர இந்தியாவின் போராட்டம் ஆதரவு இந்திய புரட்சியாளர்கள் மற்றும் ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் தொடர்பு உருவாக்கும் மார்ச் 1993 முதல் மார்ச் 1936 வரை ஐரோப்பாவின் பல பகுதிகளில் தங்கி. சுபாஷ் இத்தாலி முசோலினி சந்தித்து வியன்னா தனது தலைமையகத்தில் வைத்து. சுபாஷ் நாசிசத்தின் இன கோட்பாடு எதிர்க்கிறது ஆனால் அதன் அமைப்பு பலம் மற்றும் ஒழுக்கத்தை பெரிதும் பாராட்டப்பட்டது. மார்ச் 27, 1936 இல் அவர் பம்பாய் கப்பலேறி ஆனால் உடனடியாக இறங்கும் பின்னர் சிறைக்கு அழைத்து வந்தது.

ஒரு வருடத்திற்கு குறைந்த பொய் பின்னர், அவர் தீவிரமாக வேலை செய்ய முடிந்தது. அவர் கொல்கத்தாவில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், அவர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழிந்தும் கலந்து முதல் ஒரு பயின்றார். நேரம் சுபாஷ் மற்றும் காந்திஜி இடையே அழுத்தங்களை குணமாகும், மற்றும் காந்திஜி அடுத்த காங்கிரஸ் அமர்வு, 1938 ஜனாதிபதி ஆக தனது முயற்சிகளில் சுபாஷ் ஆதரவு. அவர் 1938 ல் ஒரு மாதம் இங்கிலாந்து சென்று இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியாவின் காரணம் நோக்கி அனுதாபம் பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர்கள் மத்தியில் இந்திய சுதந்திரம் காரணம் அணி திரண்டன. அவர் பிரிட்டிஷ் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து இருந்து ஒரு தைரியமான நடவடிக்கை இருந்தது. பிப்ரவரி 1938 ல் இந்தியா திரும்பியதும், சுபாஷ் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது ஜனாதிபதி முகவரியை இருந்து ஒரு பகுதி "நான் வறுமை, கல்வியறிவின்மை மற்றும் நோய் மற்றும் அறிவியல் உற்பத்தி மற்றும் விநியோகம் அழிப்பு தொடர்பான எங்கள் தலைவர், தேசிய பிரச்சினைகளை மட்டுமே சோசலிச வழிகளில் தடுக்கப்படும் முடியும் என்று என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை ....", படித்தது சுபாஷ் பிரிட்டிஷ் ஆட்சியின் அழுக்கையும் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் முற்றுகையிடும் தொடர்ந்து என்று தனியாக அரசியல் சுதந்திரம், போதுமானதாக இருக்கும் என்று வலியுறுத்தினார். அவர் மொழி மற்றும் மத பாரபட்சங்களை தீர்க்க மற்றும் இந்தியர்கள் மத்தியில் உயர்ந்த எழுத்தறிவு விகிதத்தை அடைய தேவையை வலியுறுத்தினார். காந்திஜி தொழில்துறை வயதில் உலகின் மற்ற போட்டியிடும் மீது கிராமத்தில் தொழில்கள் மற்றும் மன அழுத்தம் சுபாஷ் விமர்சனம் இணைந்து மிக இடதுசாரி மற்றும் கடுமையாக மறுத்தனர் சுபாஷ் நாட்டின் கொள்கைகளை கண்டுபிடிக்கப்பட்டது. சர்தார் Vallabhai படேல், காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவராக சுபாஷ் ஆண்டு குறித்தது நேரு இருமனம் இருந்து ஆதரவு இல்லாததால் எதிர்ப்பு. சுபாஷ் 'பெரும் பங்களிப்புகளை ஒரு தேசிய இயக்கம் இணையாக இயங்கும் ஒரு பொருளாதார திட்டம் வளர்ச்சிக்கு, தேசிய திட்டமிடல் குழு அமைக்க வேண்டும். காந்திஜி வங்காள அரசு (Krishak பிரஜா கட்சி & முஸ்லீம் லீக் இடையில் ஒரு கூட்டணி) வெளியேற்றினால் மற்றும் காங்கிரஸ் Krishak கட்சி கூட்டணி பொறுப்பேற்க வேண்டும் என்று சுபாஷ் 'யோசனை எதிர்த்த போது காந்திஜி மற்றும் சுபாஷ் இடையே உள்ள வேறுபாடுகள், ஒரு நெருக்கடி வழிவகுத்தது. யோசனை வங்காளம், மற்றும் இந்தியாவின் இறுதியில் பகிர்வில் முஸ்லீம் லீக் வலுப்படுத்தும் இதன் விளைவாக காந்தி, நேரு, விமர்சிக்கப்பட்டது. அதை சுபாஷ் தனது திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று இன்று தெளிவாக இருக்கிறது, வங்காளம் அட்லாஸ் ஒரு வேறுபட்ட நிறுவனம் இருக்க வேண்டும்.

காங்கிரஸ் பித்தளை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், சுபாஷ் அவர் மார்ச் 1939 இல் ஒரு இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என பெரும்பாலான மத்தியில் ஒரு பிடித்த இருந்தது. காந்திஜி தனது சொந்த தோல்வி என சுபாஷ் வெற்றி கருதப்படுகிறது மற்றும் ராஜினாமா செய்ய செயற்குழு உறுப்பினர்கள் அணிவகுத்து வேகமாக சென்றார். சுபாஷ் ராஜினாமா மற்றும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் காங்கிரஸ் தலைவர் கருதப்படுகிறது.

மே 1939 ல், சுபாஷ் காங்கிரஸ் உள்ள இடது சக்திகளின் ஒரு குடை அமைப்பான காங்கிரஸ் உள்ள பார்வர்டு பிளாக் உருவாக்கப்பட்டது. காந்திஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சி துறை பிளவு சுபாஷ் குற்றம் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி இருந்து சுபாஷ் நீக்கும் தீர்மானம் தயாரிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு எந்த பதவிகளில் இருந்து அவரை கட்டுப்படுத்தும். செப்டம்பர் 3, 1939 சுபாஷ் போர் பிரிட்டன் மற்றும் ஜெர்மனி இடையே உடைத்து என்று தகவல். சுபாஷ் பார்வர்டு பிளாக் உறுப்பினர்கள் பிரிட்டிஷ் எதிராக நிலத்தடி போராட்டத்தின் யோசனை விவாதிக்கப்பட்டது. சுபாஷ் வைஸ்ராயாக இருந்து நோக்கம் போர் ஒரு பிரகடனம் பெற காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தி; அவர் மறுத்துவிட்டார்.

சுபாஷ் மேற்கு வங்காள மாகாண காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் மாதம் காங்கிரஸ் காரிய கமிட்டி மாகாண குழு அதிகாரத்தை திசைமாறி போவதோடு, அதன் சொந்த தற்காலிக குழு நியமனம்.

பார்வர்டு பிளாக் படிப்படியாக போராளி மாறியது மற்றும் ஏப்ரல் 1940 மூலம் அதன் மூத்த உறுப்பினர்கள் மிகவும் கைது செய்யப்பட்டனர். சுபாஷ் அவர் இந்தியா சுதந்திரம் பற்றி அழைத்து வர முடியும் ஒரே வழி நாடு விட்டு வெளிநாட்டு பிரதேசங்களில் இருந்து போராடி இருந்தது என்று தீர்மானித்து கொண்டார். அவர் தீவிர பஞ்சாப் மற்றும் போராளிகள் ஏற்பாடு ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யாவில் தொடர்புகளை கொண்டிருந்த பதான் ஆர்வலர்கள் தொடர்பு செய்தேன். சுபாஷ் பிரிட்டன் ஜூன் 1940 ல் பிரான்ஸ் சரணடைய தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையில் இருந்தது என்று தெரியும். அவர் கிளைவ் தோற்கடிக்கப்பட்டார் யார் வங்காளம் கடைசி மன்னர் நினைவாக, ஜூலை 3 ம் தேதி சிராஜ் உத்-daula நாள் வெளியீட்டு அறிவித்தார். அவரது திட்டம் ஊர்வலமாக நடத்த மற்றும் இந்து மதம் மற்றும் முஸ்லீம் தேசியவாதிகள் ஐக்கியப்படுத்தும் இருந்தது. அரசு ஜனாதிபதி ஜெயில், கல்கத்தா ஜூலை 2, 1940 அன்று சுபாஷ் interceded மற்றும் சிறை.

சுபாஷ் சந்திர போஸ் லைவ்

நேதாஜி என்று வெளிநாட்டு உதவிகளை பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் இந்தியா ஒரு வேண்டும் என்று நம்பப்படுகிறது. 1939 ஆம் ஆண்டு, இரண்டாம் உலக போர் வெடித்தது போது, சுபாஷ் அவர்கள் பிரிட்டன் எதிரிகள் இருந்த ஜெர்மனி, இத்தாலி, மற்றும் ஜப்பான் உதவி முயன்றது இதனால் இயற்கை நட்பு இருக்கும். 1941 ல், அவர் ஒரு மவுலவி போன்ற வேடத்தில் மற்றும் காபூல், ஆப்கானிஸ்தான் சென்று கல்கத்தாவில் ஒரு வீட்டை கைது தப்பித்துக்கொண்டிருந்தார். பின்னர், அவர் ஒரு இத்தாலிய பாஸ்போர்ட் கொள்வனவு மற்றும் பெர்லின், ஜெர்மனி தப்பியோடினர்.

அவர் அங்கு ஹிட்லர் சந்தித்து கலந்துரையாடினார் தனது திட்டங்கள் மற்றும் இலவச இந்தியா தனது உதவியை நாடினார். அவர் முசோலினி உதவி கோரினார். அவ்வப்போது, அவர் சக இந்தியர்கள் தனது நோக்கங்களை தொடர்பு மற்றும் அவர் உயிருடன் இருந்தார் என்று நிரூபிக்க பெர்லினில் இருந்து ஆசாத் ஹிந்த் வானொலி தனது பேச்சில் ஒளிபரப்பப்பட்டது. ஜெர்மனி தோல்வி பிறகு, நேதாஜி அவர் இனி ஜெர்மனி தனது போராட்டத்தை தொடர முடியவில்லை என்று உணர்ந்தேன்.

இறுதியில், நேதாஜி, ஜூன் 1943 ஜப்பான் அடைந்தது. அவர் சில 30,000 இந்திய வீரர்கள் கொண்ட இந்திய தேசிய இராணுவம் (INA) நிறுவப்பட்டது. அவர் ஆதரவு, இந்தியா மற்றும் வெளியே இருவரும், மக்கள் முறையீடு பொருட்டு தென் கிழக்கு ஆசியாவில் ஒரு வானொலி பிணைய அமைக்க. இந்திய தேசிய ராணுவத்தின் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா மீது போர் பிரகடனம் செய்தார். எனினும், இந்திய தேசிய ராணுவத்தின் அங்கு ஜப்பனீஸ் படைகள் கடுமையான தோல்வியை அடுத்து இந்திய பர்மிய எல்லையில் இருந்து பின்வாங்க வேண்டி இருந்தது. பிரிட்டிஷ் பாதுகாப்பு துளைத்து செல்ல இருந்தது. "தில்லி சலோ" திட்டம் தோற்றுவிட்டது என்று, நேதாஜி தனது உறுதியை வலுவான என்று உலகிற்கு நிரூபித்தது அவரது அணுகுமுறை பிரிட்டிஷ் பிடியிலிருந்து இலவச இந்தியா தனது கனவு நேர்மறை இருந்தது.
ஆகஸ்ட் 16, 1945 நேதாஜி சிங்கப்பூர் பாங்காக் ஒரு விமானம் ஏறி. நேதாஜி பாங்காக்கில் இருந்து சைகோன் ஒரு வகை 97-2 குண்டு 'சாலி' பறந்து திட்டமிடப்பட்டிருந்தது. விமானம் தைப்பே ஒரு பயணத்தின் போது இடையே தங்கல் மற்றும் தைப்பே இருந்து எடுத்து ஆஃப் நிமிடங்களில் செயலிழந்தது. நேதாஜி உடல் ஆகஸ்ட் 20, 1945 அன்று தைபே நகரில் தகனம் அவர்கள் Renkoji கோயில் ஓய்வெடுக்க அங்கு அவரது சாம்பல் செப்டம்பர் 5, 1945 அன்று டோக்கியோ பறந்து வந்தன. இந்த நாள், பல நேதாஜி விமான விபத்தில் இருந்து தப்பியது மற்றும் மறைக்கும் சென்றார் என்று நம்புகிறேன்.

நேதாஜி நிபந்தனையற்ற மற்றும் முழு சுதந்திரம் வேண்டும். அவர் சாதி தடைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் அல்லது மத சகிப்புத்தன்மை அற்ற எந்த ஒரு வர்க்கமற்ற சமூகம் கனவு. அவர் செல்வம் மற்றும் இனவாதத்தை அழிவு சம விநியோகம் நம்பினார். அவரது முழக்கம் "ஹிந்த் ஜெய்" இன்றும் ஒரு பெரிய பிணைப்பு சக்தியாக செயல்படுகிறது
போஸ் மர்மம்: ஒரு கண்ணோட்டம்
அனூஜ் தார் மூலம்

இது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 60 ஆண்டுகள் தனது சர்ச்சைக்குரிய இறந்த பிறகு செய்தி தொடர்ந்து எப்படி ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு வழியில், இந்த மாறாக அவர்கள் மக்கள் அவரை ஓரம்கட்டி வேண்டும் என்று அடுத்தடுத்து இந்திய அரசாங்கங்கள் மீறி வருகிறது. Jinnha மற்றும் காந்தி பின்னர் போஸ் தென் ஆசியாவில் மூன்றாவது பிரபல தலைவர் என அண்மையில் பிபிசி ஆன்லைன் கருத்து கணிப்பு. பளிச்சென, அதே கருத்து கணிப்பு படி, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, பின்பற்ற முடியாத அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற பிரபலங்களான இனி ரேடார் கூட blip செய்ய.

வரும் மாதங்களில் ஒரு வகையான மறுபிரவேசம் செய்து சுபாஷ் பார்க்கும். இந்தியாவின் மிக நீண்ட இயங்கும் அரசியல் சர்ச்சை அதன் பெரும் இறுதியை நோக்கி செல்கிறது. ஐந்து ஆண்டுகளாக இந்தியாவில் ஊடகங்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் ஒரு தொடுதல் ஏற்றுக்கொண்டுள்ளன மற்றும் சுபாஷ் சந்திரபோஸின் "மரணம்" என்று நீதிபதி எம்.கே. முகர்ஜி விசாரணைக்கு நோக்கி அணுகுமுறை வகை சென்று. இல்லை இனி. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 1999 ல் உருவாக்கப்பட்டது கமிஷன், நவம்பர் அதன் அறிக்கை இன்று வரை பற்சக்கர. அரசு நடவடிக்கை எடுத்து அறிக்கை இணைந்து பாராளுமன்றத்தில் அதை முன்வைக்க வேண்டும். அல்லது அரசியலில், அல்லது வரலாறு, அல்லது சூழ்ச்சியை, அல்லது மர்மம் வட்டி யார் நீங்கள் அந்த நல்ல பாருங்கள்: இது தவிர எந்த பெரிய இல்லை.

Psst ... டாப் சீக்ரெட்!

இந்த உணர்வை நேதாஜி மர்மம் வேறு சகாப்தம் சொந்தமானது என்று தொடக்கத்திலேயே குப்பைக்கு நாம். எந்த சந்தேகமும் இல்லை, அது 1945 இல் தொடங்கப்பட்டது; ஆனால் இதுநாள் வரை கொதிப்பை வருகிறது. சர்ச்சை ஒரு அதிர்ச்சி தகவல் மற்றும் உத்தியோகபூர்வ பதிவுகள் மணிக்கு ஆலோசனை என்ன. நேதாஜி இரண்டாம் உலக போரின் முடிவில் இறந்திருக்க வேண்டும், இன்னும் இந்திய அரசு அவரை பற்றி கோப்புகளை உட்கார தொடர்ந்து. அவர்கள் தங்களை செய்கிறீர்கள் ஆவணங்களை வெளியிட பிரிட்டிஷ் மற்றும் ரஷியன் அரசுகள் நெருங்கி எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.

ஆனால் ஏன் மீண்டும் இந்தியா பல தசாப்தங்களாக வெளியே தனது எதிரிகளை ஒரு பிரச்சனை நிறுத்திக்கொண்டது மனிதன் பற்றி சில விவரங்கள் மீது முன்னெச்சரிக்கையாக இவ்வளவு? இந்த நீங்கள் ஜென் எக்ஸ் dudes உள்ளது: இந்திய அரசு பராமரித்து கொள்ள நேதாஜி கோப்புகளை சில 1990 களின் நடுப்பகுதியில் விண்டேஜ் உள்ளன! என்று, பிந்தைய ராஜீவ் காந்தி காலத்தில் உள்ளது. யோசனை அழி ... "ஓ, இது போன்ற ஒரு பழைய கதை, இப்போது வம்பு என்ன!" இந்திய அரசு ஒத்து கொள்ள மாட்டாள். அவர்கள் கூட இப்போது பெரிய நேரம் பிரச்சனையில் கூற முடியும் என்று நேதாஜி பற்றி ஏதாவது இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர்கள் முகர்ஜி கமிஷன் பல டாப் சீக்ரெட் கோப்புகளை ஒப்படைக்க மறுத்து அதனால் தான். அவர்கள் ஏன் அப்படி? சரி, இரண்டு நரசிம்ம ராவ் காலத்தில் கோப்புகளை விஷயத்தில், அவர்கள் இந்த ஆவணங்கள் தன்மை மற்றும் உள்ளடக்கங்களை "வெளிப்படுத்தல் ... பெரிய அளவில் மக்கள் உணர்வுகளை புண்படுத்தும் என்று காரணமாகவே மற்றும் பரந்து விரிந்த எதிர்வினைகள் வருவதற்காக இருக்கலாம் .... அரசாங்க என்றார் ஆவணங்கள் வெளிப்படுத்தின இருந்தால் நட்பு நாடுகளுடன் உறவுகளை மேலும் தீவிரமாக பாதிக்கப்படும். "

இந்த ஆவணங்கள் என்ன சொல்ல வேண்டும் என்று தெரிய வேண்டும் கூடாது? எப்படி பூமியில் ஒரு செத்த மனிதன் பற்றி சில துணுக்குகள் மற்ற நாடுகளுடன் இந்தியாவின் உறவு பாதிக்கும்? நாங்கள் மாநில உண்மைகள் எங்கள் அரசு கேட்க வேண்டும்? நாம் விடுவித்த மனிதன் என்ன ஆனது என்று எனக்கு உரிமை இல்லையா?

முன் கருதப்படுகிறது கருத்துக்கள்

மக்கள் சொல்லும் போது, அது "நாங்கள் விசாரிக்க போகலாம் எவ்வளவு?", வெறுப்பு மனப்பான்மை நிரூபிக்கப்படும் தான் அமெரிக்கர்கள், உதாரணமாக, அதே defeatist சிந்தனை கொண்ட besotted வேண்டும் என்றால், அவர்கள் இருக்கும் பெரும் சக்தியாக இல்லை என்று. உண்மையில் அவர்கள் விட்டு கொடுக்க கூடாது. எப்படி ஒரு நாடு போராட யார் குளிர் அந்த வெளியே செல்ல முடியும்? கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்க அரசு அவர்களை காணவில்லை இரண்டாம் உலக airmen கண்டுப்பிடிக்க உதவும் இந்திய அரசு கேட்டுக்கொண்டது. நேதாஜி எங்களுக்கு சுதந்திரம் போர் தொடுத்து போது காணாமல் போனது நாம் அவருக்கு என்ன நடந்தது என்று விரும்பவில்லை. அப்பட்டமான ungratefulness என்ன அது இல்லை என்றால்?

Dismissively "கமிஷன்கள் பின்னர் கமிஷன்கள் உள்ளன" என்று அந்த முந்தைய "தரகு" தேசத்தின் மீது விளையாடப்படும் மோசடிகளை என்ன மாதிரியான எந்த யோசனை. 1956 இல், ஷா நவாஸ் கான், காங்கிரஸ் எம்.பி., பின்னர் ரயில்வே அமைச்சர் ஒரு செயலாளர், ஒரு குழு தலைமையில் - ஒரு சரம் ஒரு பொம்மை, உண்மையில். அவர் நேரு அரசாங்கம் கூறினார் என்ன என்று நம்ப காரணங்கள் உள்ளன. அவரது "கட்டளை செயல்திறன்" பிறகு ஷா நவாஸ் அமைச்சர் செய்யப்பட்டது. 1970 களின் தொடக்கத்தில் ஒரு கமிஷன் தலைமையில் யார் GD கோஸ்லா, உடன் தொடங்க நேருவின் நண்பர். அவர் நேதாஜி காணாமல் சென்று விசாரித்தார் கூட பிரதமர் இந்திரா காந்தியின் சுயசரிதை எழுதினார். நீங்கள் இது போன்ற விஷயங்கள் இப்போது நடக்கிறது நம்பமுடிகிறதா? இந்த பேனல்கள் இருவரும் நேதாஜி தைவான் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அறிவித்தார். அவர்கள் தைவான் அரசு மக்கள் அவர்களுக்கு தேவை எவ்வளவு என்று தெரியுமா கவலைப்படவில்லை என்று நினைக்க வேண்டாம்.

"ஆனால் பிரச்சினை இறந்துவிட்டாள்!" சரி, வாதம் மீது ஆணையாக, அந்த வழக்கில் இருக்கும் என்றால், அதை உயிரோடு வந்து போகிறது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் ஆணைக்குழு தலைப்பு உள்ளது நேரத்தில், திசையில் எளிதாக இருக்க தெரியவில்லை யார், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ஒரு அறிக்கையை ஒப்படைக்க போகிறது . அறிக்கை அனைத்து விவாதம் ஒரு இலவச பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முன் அமைச்சரவை விவாதிக்கப்படும் வேண்டும் வேண்டும். இது நேதாஜி மர்மம் சூடான தலைப்பு என்று தவிர்க்க முடியாதது.

Perplexing கடந்த

மக்கள் முடிவுகளை குதிக்கிறது எப்படி வேடிக்கை. "என் தாத்தா இந்திய தேசிய ராணுவத்தின் ல் அவர் நேதாஜி இறந்துவிட்டார் எனவே நான் நம்புகிறேன் என்றார்." இந்த சில நாடுகள் 6 தசாப்தங்களாக விவாத உள்ளது பிரச்சினையில் தங்கள் தீர்ப்பை கொடுக்க எப்படி உள்ளது. அது மட்டும் என்று எளிதாக இருந்தது. அங்கு இலவச இந்தியாவின் இடைக்கால அரசு சீரமைக்கப்பட்டது 50,000 மக்கள் மீது மேலும் ஒரு கையளவு தனது கடைசியாக அறியப்பட்ட நாட்களில் நேதாஜி நடந்தது என்ன தெரியும். மீதமுள்ள வீட்டிற்கு இந்தியர்கள் எவ்வளவு இருட்டில் இருந்தது. அவர்கள் அனைத்து கதைகளை கேட்டார் ... நேதாஜி இறந்துவிட்டார் அல்லது நேதாஜி தப்பினார். உண்மை, அல்லது அது அறிகுறி, விசாரணைகளும் அதன் அறிக்கைகளை பொது களத்தில் இல்லை விசாரணைகள், பிறகு வெளியே வந்தார்.

ஆகஸ்ட் 25, 1945 அன்று இந்திய செய்தித்தாள்கள் நேதாஜி ஆகஸ்ட் 18 ம் தேதி தைப்பே ஒரு குறும்பு விமானவிபத்தில் (பின்னர் Taihoku) இறந்து விட்டதாக செய்தி உடைத்து. அவர் இந்த நடந்தது போது இந்திய தேசிய ராணுவத்தின் சரணடைவு வெளியே வேலை செய்ய டோக்கியோ வரை பறக்கும். பிரிட்டிஷ் அதை யாரும் நம்ப வேண்டும். வைஸ்ராயாக Wavell ஒரு காற்று விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்த ஜப்பனீஸ் அறிவிப்பு உண்மை என்று தெரியவில்லை "என்று ஆகஸ்ட் 23 ம் தேதி தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டார். நான் மிகவும் சந்தேகிக்க, அதை அவர் நிலத்தடி செல்ல பொருள் என்றால் வெளியே அளிக்க வேண்டும் வெறும் என்ன ... " அவர்கள் தென் கிழக்கு ஆசியா தங்கள் கிராக் புலனாய்வு அணிகள் அனுப்பி வைத்தார். கண்டுபிடிப்புகள் bewildering. நேதாஜி டோக்கியோ தலைப்பு. உலக போர் நிறுத்த எதிரெதிரே மாதங்களுக்கு முன், அவர் காலனித்துவ தனது போர் ஒரு புதிய அத்தியாயத்தை திட்டம் தொடங்கியது. அவர் பனிப்போர் வருவதை பார்த்தேன் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் வெளியே அடைந்தது. பிரிட்டிஷ் உளவுத்துறை சுபாஷ் அவரது மரண நேரத்தில் ரஷ்யா போகிறது என்று தெளிவாக தகவல் கிடைத்தது. ஜப்பனீஸ் தனது இலக்கு பற்றிய ஒரு தவறான கதையை அவுட் கொடுத்தார். விபத்தில் தப்பியவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு மற்றும் பதிவுகளை கைப்பற்றியது. வெளிப்பட்ட படம் துரோகிகளும் இருந்தது. நேரில் பார்த்தவர்கள் பொய் வேண்டும் கண்டுபிடிக்கப்பட்டது, அவர்கள் விதைக்கப்பட்ட இருந்தது போல் பதிவுகளை தோன்றினார்.

அமெரிக்கர்கள் உதவியுடன் உள்ள தொய்வு. உண்மையில் இது சிறந்த அறிவு கொண்ட அவர்கள். அவர்கள் செப்டம்பர் 1945 இல் தைவானில் அடைந்த அவர்கள் கண்டது என்ன நினைக்கிறேன். "... சுபாஷ் சந்திர போஸ் ஒரு விமானம் விபத்தில் எந்த நேரடி சான்றும் இல்லை ... என்று விளைவு ஜப்பனீஸ் பொது அறிக்கைகள் போதிலும்." இந்த பத்து மாதங்கள் நேதாஜி "இறப்பு" பின்னர், வெளியுறவுத்துறை கூறியுள்ளது. என்ன உண்மையில் என்ன நடந்தது? "லண்டன் தனது அண்மையில் விஜயம் DIB சுபாஷ் போஸ் ரஷ்யாவில் உயிரோடு என்று விளைவு ரசீது ... தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது." இது மே 1946 அறிக்கை மற்றும் D.I.B. இருந்து அதாவது, புலனாய்வு பணியகம் சர் நார்மன் ஸ்மித் இயக்குநர்.

இலவச இந்திய அரசு நேதாஜி மர்மம் சோவியத் இணைப்பு பற்றி தெரிந்தது. ஆனால் அவர்கள் அனைத்து காலத்தை-தாமதம் செய் மற்றும் மாநில எந்த விசாரணை தேவை என்று இருந்தது. பிரதமர் நேரு விஷயம் விசாரிக்க ஒப்பு முன் அழுத்தம் பத்து ஆண்டுகள் பிடித்தன. இந்த பலத்த: அரசு நேதாஜி விதி ஆய்வு செய்ய நினைக்கவில்லை. ஷா நவாஸ் இருந்து Monoj முகர்ஜி வேண்டும், ஒவ்வொரு முறை அவர்கள் தள்ளப்பட்டனர். இது அருவருப்பானவற்றை இல்லை?

சரியான முன்வைக்க

முகர்ஜி கமிஷன் கடவுளுக்கு நன்றி! அல்லது நாம் மிகைல் Gorbahev நன்றி? சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி நேதாஜி பிரச்சினை வெளியே வந்தது. 1990 களின் நடுப்பகுதியில் ரஷ்யர்கள் தங்களை சுபாஷ் அவரது இறப்புக்கு பிறகு அவர்களுடன் என்று தொடங்கியது. விஷயம் இந்தியாவில் அடைந்தது மற்றும் பத்திரிகை ரேக் அதை செய்தேன். ஆனால் கயிறு பிரணாப் முகர்ஜி உடன் நரசிம்மராவ், ஒரு விஷயம் சொல்ல முடியாது. ஒரு நாட்டுப்பற்று சக கல்கத்தா உயர் நீதிமன்றம் சென்று நீதிமன்றத்தில் விஷயம் விசாரணைக்கு திறந்த இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரசு chided மற்றும் எங்கே, எப்படி நேதாஜி இறந்து விட்டதாக கண்டுபிடிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறினார். Mercifully, தீர்ப்பு வந்த நேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் முகர்ஜி கமிஷன் விசாரணை pathbreaking. அவர்கள் இந்திய அரசு, பிரதமர் மட்டத்தில், நேதாஜி மரணம் வழக்கு தொடர்பான ஆதாரங்களை முறையாக, சட்டவிரோத அழிப்பதில் நடப்பார் என்று, மற்றவர்கள் மத்தியில், கண்டுபிடித்துவிட்டேன். அரசு நீதி முகர்ஜி என்ன துல்லியமாக இது தைவான் எந்த விசாரணை, விரும்பவில்லை. விளைவு: ROC அரசு நாம் தசாப்தங்களாக கூறியுள்ளார் விபத்தில் மிக நிகழ்வு நேதாஜி கொலை செய்தன.

இந்திய அரசு மேலும் ரஷ்யாவில் எந்த விசாரணை விரும்பவில்லை; ஆனால் இப்போது நடக்கிறது. மிகவும் பவுண்டரி மற்றும் அழுத்தங்கள் பின்னர், முகர்ஜி கமிஷன் செப்டம்பர் 20 முதல் ரஷ்யா பயணம். எனினும், ஒரு நல்ல போதுமான வளர்ச்சி இல்லை. ஆணைக்குழு அரசு தொடர்பு அவர்கள் ரஷ்யாவில் கமிஷன் அணுகல் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தொடர்பான விளம்பரங்கள் ஆவணங்களை உதவ எதுவும் செய்ய முடியாது என்று கூறுகிறார், நேதாஜி யின் "பிந்தைய மரணம்" வாழ்க்கை பற்றி உறுதியான தகவல் அடங்கிய வேண்டும் என்றார். நேரம் நமக்கு வந்து விட்டது, இந்திய மக்கள், அவர்கள் மீண்டும் தசாப்தங்களாக செய்திருக்க வேண்டும் என்று நமது அரசு ஏதாவது இருந்து கோரி: கடவுளுக்காக, மாநில உண்மைகளை செய்ய ரஷியன் அரசு தலைவர் கோரிக்கை. இந்திய மக்கள் தங்கள் விடுதலை என்ன ஆனது என்று எனக்கு வேண்டும்.