Sunday, September 22, 2013

ஏ பெண்ணே...!!

ஏ பெண்ணே...!!

மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின் 
மனதிற்கு சொல்லிட வேண்டும் உன் கால் மிஞ்சு..

நிமிர்ந்து பார்த்து நடந்து வரும் ஆணின் நெஞ்சத்திற்கு சொல்லிட வேண்டும் உன் நெற்றிக் குங்குமம்...

கண்கள் பார்த்து பேசிடும் ஆணின் கவனத்திற்கு சொல்லிட வேண்டும் உன் கழுத்து மாங்கல்யம்...

நீ இன்னொருவனின் இல்லாள் என்று...

கண் மை இட்டு கண்களை அழகாக எடுத்துக் காட்டுவதில் காலம் தவறாத நீ கழுத்தில் இருக்கும் மங்கல்யத்தை மறைப்பதேனோ??

குதிகால் செருப்பில் காலை அலங்கரிக்க மறக்காத நீ
கால் விரலின் மிஞ்சியை மறந்ததேனோ??

தலைவிரி கோலமே நாகரீகமெனும் தத்துவத்தை விரும்பும் நீ தலை வகுட்டில் வைக்கும் குங்குமத்தை விரும்பாததேனோ??

இவைகளை நீ சம்பிரதாயங்கள் என்கிறாய் நான் சாட்சிகள் என்கிறேன்..

உன்னவனுக்கு மட்டுமே நீ உரியவளாய் இருக்க..
எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க..
மறைத்திடாதே ஒரு போதும் இந்தச் சாட்சிகளை..

# நவீனமயப்படுத்தல் என்ற பெயரில் பெருமதிமிகு பண்பாடு மற்றும் பாரம்பரியம் என்பவற்றை புறக்கணிக்கவோ மாற்றியமைக்கவோ வேண்டாம்.

Sunday, September 15, 2013

மனித உறவுகள் மேம்பட!!

•தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.
•அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள். (LOOSE TALK)
•எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காகக் கையாளுங்கள். (DIPLOMACY)
•விட்டுக்கொடுங்கள். (COMPROMISE)
•சில நேரங்களின் சிற்சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என்று உணருங்கள். (TOLERANCE)
• நீங்கள் சொன்னதே சரி, நீங்கள் செய்ததே என்று கடைசி வரை வாதாடாதீர்கள். ( ADAMANT ARGUMENT)
•குறிகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (NARROW MINDEDNESS)
•உண்மை எது, பொய் எது என்று அறியாத நிலையில் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் , அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (CARRYING TALES)
•மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். (SUPERIORITY COMPLEX)
•அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். (OVER EXPECTATION)
•எல்லோரிடத்திலும் எல்லா விஷ யங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
•கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
•அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
•உங்கள் கருத்தக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். (FLEXIBILITY)
•மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். (MISUNDERSTANDING)
•மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும். மற்றும் இனிய இதமான சொற்களைப் பயன் படுத்தவும் தவறாதீர்கள். (COURTESY)
•புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச்சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
•பேச்சிலும், நடத்தையிலும் திமிர் தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.
•அவப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள். (FRAKNESS)
•பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன்வாருங்கள். (INITIATIVE)
•தேவையான இடங்களில் நன்றியையும் பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்.